இந்த பகுதிகளில் மே 16 முதல் 15 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் அரசு பொதுப்பணித் துறை பிரிவு சார்பில் கழிவுநீர் வாய்க்கால் வடிகால் அமைக்கும் பணி நகர பகுதிகளில் நடைபெறயிருக்கிறது. எனவே அதன் காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதனை அடுத்து அதன் படி சுப்பையா சாலை, லால்பகதூர் சாஸ்திரி சாலை இடையே வருகிற 30 ஆம் தேதி வரையிலும், லால் பகதூர் சாஸ்திரி சாலை, ஐ.ஜி அலுவலகம் இடையே மே 1-ம் தேதி முதல் வருகிற ` மே 15-ம் தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

அதே போன்று பிராங்கோயில் மார்ட்டின் தெரு சந்திப்பில் லொரிஸ்டோன் தெருவுக்கும், எஸ்.வி. படேல் சாலைக்கும் இடையே மே 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

மேலும் கொம்பங்கி தெரவில் ஐ.ஜி அலுவலகம் முதல் தலைமை செயலகம் வரை மே 16-ம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பை புதுவை போக்குவரத்து எஸ்.பி மாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.