மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் போக்குவரத்து போலீசார் எச்சரிகை

சென்னை: சென்னையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், அப்படி அபராதம் செலுத்த தவறியவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும்போக்குவரத்து போலீசார் எச்சரிகை

இதையடுத்து இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, “சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த 1 மாதத்தில் போக்குவரத்து காவலர்கள் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.3.5 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், போதை நபர்களுடன் வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், அவர்களும் ரூ.10,000 அபராத தொகை கட்ட வேண்டும் என்ற விதி தற்போது கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.

இதனை அடுத்து அபராத தொகை கட்டாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ அல்லது அசையும் சொத்துக்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.