கவாச் என்ற ரயில் பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தவில்லை

ஒடிஷா: பாதுகாப்பு நடைமுறைகள் இல்லை... விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் கவாச் என்ற ரயில் பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவில்லையென ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப்சர்மா தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் இந்திய தொழில்நுட்பத்தில் கவாச் என்ற கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

ரயிலின் முன்பக்கம் பொருத்தப்படும் இந்தக் கருவி, ஒரே தண்டவாளத்தில் எதிரே ரயில் வருவதையோ அல்லது தண்டவாளத்தில் இடையூறு இருப்பதை உணர்ந்தாலோ சுமார் 380 மீட்டருக்கு முன்னதாகவே தன்னிச்சையாக செயல்பட்டு என்ஜின் இயக்கத்தை நிறுத்தி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு சில வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விபத்து நடைபெற்ற ஒடிசா மாநில வழித்தடத்தில் செயல்பாட்டிற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.