பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டு விபத்து

கொலம்பியா: நடுவானில் இராணுவ விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொலம்பியாவில், பயிற்சியின் போது நடுவானில் இரு இராணுவ விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.

கடந்த சனிக்கிழமை அன்று அபியாய் விமானப்படை தளத்தில், கொலம்பிய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் விமானிகள் சாகச பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக 2 விமானங்கள் ஒன்றோடொன்று மோதி தீப்பற்றியது.

இந்த விபத்தில் 2 விமானங்களில் பயணித்த விமானிகளும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.