அரசு வக்கீல்களுக்கு பயிற்சி... தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை: அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளித்த தமிழக அரசு தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.

குற்ற வழக்குகளை திறமையாக விசாரிப்பது குறித்து தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனையின் போது அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க தலைமை செயலாளர் ஏற்பாடு செய்தார். இந்நிலையில் 11 தாலுகாக்களில் சிறப்பு புலனாய்வு பிரிவுகளை அமைத்து தீவிர குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தாக்கல் செய்தார்.

அப்போது, அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளித்த தமிழக அரசு தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்தது. டிஜிட்டல் ஆதார விதிகளை உருவாக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. விசாரணையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் வழக்கை ஜூலை 21ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.