விரைவில் தமிழகத்திற்கு மின்சார பேருந்துகள் வாங்கப்படும் ... போக்குவரத்துத்துறை அமைச்சர்

சென்னை: விரைவில் மின்சார பேருந்துகள் ... தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு அரசு மாநகர பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே இதன் மூலம் தினசரி 60 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்து கொண்டு வருகின்றனர்.

இந்த திட்டத்தால் பெண்களின் வாழ்க்கையில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் விரைவில் தமிழகத்திற்கு மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதனை அடுத்து இந்த மின்சார பேருந்து திட்டம் டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்து வருகிறது. மேலும் இந்த மின்சார பேருந்துகள் காற்று மாசுபாட்டையும் கட்டுப்படுத்துகிறது.

மேலும் தற்போது திமுக தலைமையிலான ஆட்சியில் முதல் கட்டமாக 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதையடுத்து அதற்கான ஒப்பந்தம் இன்று போடப்பட்டுள்ளதாவும் கூறியுள்ளார்.