திரிபுராவில் 90 வயது மூதாட்டியை கற்பழித்த இரண்டு மர்ம ஆசாமிகள்

திரிபுரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள பர்ஹல்டி என்ற கிராமத்தில், 90 வயதான மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24-ந்தேதி இரவு வீட்டில் மூதாட்டி தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் வந்து வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.

ஆனால் மூதாட்டி கதவு திறக்கவில்லை. இதனால் அந்த மர்ம நபர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து மூதாட்டியை கற்பழித்துள்ளனர். இந்த சம்பவத்தால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட மூதாட்டி இதுகுறித்து யாரிடமும் கூறவில்லை.

இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரது உறவினர்கள் என்ன காரணம் என்று விசாரித்தபோது, தனக்கு நடந்த அவலத்தை அவர் தெரிவித்தார். அதன்பின், மூதாட்டியின் உறவினர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.

அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கற்பழித்த மர்ம ஆசாமிகள் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தியாவில் சிறு குழந்தைகள் முதல் மூதாட்டி வரை அணைந்து வயது பெண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவது அதிகரித்து கொண்டே செல்கிறது.