மழைக்காலங்களில் தடையற்ற மின்சாரம் .. மின்சார வாரியம் சார்பாக அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மழைக்காலங்களில் தடையில்லா மின்சாரம் ..... தமிழக அரசு மக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கான உறுதியளித்து உள்ளது.எனவே இதற்காக மாதம் தோறும் முறையான பராமரிப்பு பணிகள் துணை மின்வாரிய நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து தற்போது பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் மழைக்காலங்களில் மக்களுக்கு தடையற்ற மின்சாரம் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மின்வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

எனவே இதன் காரணமாக காட்பாடி கோட்டத்தில் உள்ள மின்கம்பங்களில் சீரமைப்பு பணிகள், புதிய பொருள்களை பொருத்தும் பணிகளும், மின்பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது.

இப் பணிகளை காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.