கீரனூர் அரசு பள்ளியில் வகுப்பறையை அப்படியே ரயில் பெட்டியாக மாற்றி அசத்தி உள்ளனர் ஆசிரியர்கள்...
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் ஓவியக்கலையை வளர்த்துக்கொள்ளும் விதமாக, பள்ளி வகுப்பறையின் சுவற்றில் ரயில் பெட்டி ஓவியம் வரையப்பட்டுள்ளது.
கீரனூர் அருகேயுள்ள லெக்கணாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 230 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், ரயில்பெட்டி நேரில் பார்த்திடாத
கிராம மாணவர்கள் அதனை அறிந்துகொள்ளவும், ஓவியக்கலையை வளர்த்துக்கொள்ளும்
வகையிலும் வகுப்பறையில் ரயில் பெட்டி ஓவியத்தை வரைந்துள்ளனர்.
பார்ப்பதற்கு
அப்படியே ரயில் பெட்டியை போலவே உள்ள இந்த வகுப்பறை நிச்சயம் மாணவர்களை
வெகுவாக கவர்ந்து இழுக்கும். பள்ளி ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு
பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.