வருமான வரித்துறையினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கரூர்: அதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்... கரூரில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறையினரை தாக்கியவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், முறையாக வருமான வரி கட்டவில்லை என்றும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த செய்திகள் அடிப்படையில், விசாரிக்க சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் திமுகவினரால் தாக்கப்பட்டிருப்பதாகவும், கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி அரசில் நடைபெற்ற மதுபான கொள்கை ஊழலை விட பல மடங்கு ஊழல் தமிழகத்தில் நடந்துள்ளது என்றும், சோதனையோடு நின்று விடாமல், தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.