ராகுல்காந்தி வழக்கு குறித்த தீர்ப்பு: செல்வப்பெருந்தகை வரவேற்பு

சென்னை: அறம் வென்றிருக்கிறது என்று செல்வப்பெருந்தகை உற்சாகத்துடன் தெரிவித்தார்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் ராகுல்காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“மக்கள் தலைவர் ராகுல் காந்தியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் அறம் வென்றிருக்கிறது. இதன் மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசுக்கு மீண்டும் ஒருமுறை கொட்டு வைத்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். மேலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தனது கடமையாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.