பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும்‌ சட்டமசோதாவை தேமுதிக வரவேற்கிறது ..விஜயகாந்த்


சென்னை: பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வரவேற்பு ...தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , “பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும்‌ சட்டமசோதாவை தேமுதிக வரவேற்கிறது.

இதையடுத்து இந்த மசோதாவை கொண்டு வர கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கட்டங்களில்‌ முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்‌, தற்போது நாடாளுமன்ற மக்களவையில்‌ தாக்கல்‌ செய்திருப்பது ஓட்டு மொத்த பெண்‌ இனத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி.

மேலும்‌ மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்‌ வகையில்‌ மக்கள்‌ தொகை கணக்கெடுப்பு பணிகளை விரைவில்‌ தொடங்க வேண்டும்‌ என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்‌.

பெண்கள்‌ நாட்டின்‌ கண்கள்‌. இது பெண்‌ இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.