இன்று மதியம் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பதால் மக்களுக்கு எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் திறக்கப்படுகிறது என்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழுகொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து, ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி இன்று மதியம் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடையாறு உள்பட ஏரிக்கரையோர மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இன்று மதியம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று நீர்திறப்பு குறித்து உதவி பொறியாளரும் வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு அறிவித்துள்ளார்.