கொலம்பியாவில் ஓடும் பேருந்தில் அம்பேத்கர் படமா? - வைரலாகும் புகைப்படம்

அமெரிக்காவின் கொலம்பியாவில் டாக்டர் பிஆர் அம்பேத்கர் மற்றும் அவரது மனைவி சவிதா அம்பேத்கர் ஆகியோரது படங்கள் ஒட்டப்பட்ட பேருந்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொலம்பியாவில் ஓடும் பேருந்தில் பாபாசாகேப் படம் ஒட்டப்பட்டு உள்ளது. உண்மையில் இது பெருமைக்குரிய விஷயம் எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்தபோது, அது எடிட் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று புத்தகமான Waiting for a Visa கொலம்பிய பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் கொலம்பிய பேருந்தில் அம்பேத்கர் படம் ஒட்டப்பட்டது பற்றி எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. எனினும், இதே பேருந்தின் புகைப்படம் பல்வேறு வலைதளங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வைரல் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் அவற்றால் உயிரிழப்புகள் கூட நிகழலாம். எனவே போலி செய்திகளை உருவாக்காதீர்கள். மேலும் அதன் பின்புலம் தெரியாமல் பரப்பாதீர்கள்.