நாடாளுமன்ற தேர்தலில் நாங்க தனித்துதான் போட்டியிடுவோம்... சீமான் திட்டவட்டம்

தஞ்சாவூர்: நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முறிவை நிரந்தர பிரிவாக பார்க்கிறேன். மேலும், 50 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் என ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையாக உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தன்னை டெல்டாக்காரன் என்று கூறிக் கொள்கிறார். ஆனால் அவர் அவ்வபோது உல்டாக்காரன். இவ்வாறு நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்டார்.