வித்தியாசமான தந்தை... மகளுக்கு திருமண பரிசாக புல்டோசர் வழங்கினார்

உத்திரபிரதேசம்: வரதட்சணையாக தன் மகளுக்கு புல்டோசர் பரிசு கொடுத்த தந்தைதான் இப்போது செம வைரல் ஆகி வருகிறார். நெட்டிசன்கள் பாராட்டி கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

உத்திரப்பிரதேசம் மாநிலம் ஹமிர்பூரில் சென்ற டிசம்பர் 15-ம் தேதி முன்னாள் ராணுவ வீரர் பரசுராம் என்பவரின் மகள் நேஹாவுக்கும், கடற்படையில் பணியாற்றும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் வரதட்சணையாக தன் மகளுக்கு புல்டோசர் பரிசாக வழங்கப்பட்டது.

இது தொடர்பாக மகளின் தந்தை பரசுராம் கூறியதாவது, “தன் மகளுக்கு சொகுசு காரை வரதட்சணையாக கொடுப்பதைவிட வேறு எதாவது பயன் உள்ளதாக வழங்க வேண்டும் என நினைத்தேன். மேலும் என் மகள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

அந்த தேர்வில் தோல்வி அடைந்தால் இந்த புல்டோசர் அவளது வாழ்வாதாரத்துக்கு பயன் உள்ளதாக இருக்கும்” என கூறினார். இவ்வாறு தன் மகள் திருமணத்தில் வரதட்சணையாக புல்டோசர் பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நெட்டிசன்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.