அவர் என்ன பெரிய தலைவரா? முதலமைச்சர் கேள்வி

அவர் என்ன பெரிய தலைவரா?... நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அழைத்து விவாதம் நடத்த அவர் என்ன பெரிய தலைவரா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னுடன் விவாதம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் தயக்கம் ' என ஆ.ராசா கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக முதல்வர் பழனிசாமி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது விவதத்திற்கு அழைக்கும் அளவுக்கு ராசா என்ன பெரிய தலைவரா? என கேள்வி எழுப்பிய முதல்வர், காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த அவர் தவறு செய்த காரணத்தினால்தான் காங்கிரஸ் அரசாங்கமே ராசாவை கைது செய்தது என பதில் அளித்துள்ளார்.