சென்னை: அமைச்சர் தகவல்... சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண சட்டமன்ற தொகுதி வாரியாக வாட்ஸ் அப் குழு அமைக்கப்படவுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை, திரு.வி.க. நகர் மண்டல அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு
பேசுகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக
சட்டமன்ற வாரியாக வாட்ஸப் குழு அமைக்கப்படும் எனவும், அந்த வாட்ஸப்
குழுவில் முக்கிய அதிகாரிகள் இணைக்கப்படுவார்கள்.
குறைகள்
எதுவாக இருந்தாலும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் அதிலே
பகிர்ந்து கொள்ளலாம் எனவும் கூறினார். தொடர்ந்து அந்த குறைகளுக்கு
மேற்கொள்ளப்பட்ட நிவாரணம் குறித்து அந்த குழுவில் பதிலளிக்கப்படும்.
வாட்ஸப் குழுவில் மேயர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட
அனைவரும் இணைகிறார்கள். மக்களுடைய கோரிக்கைகள், குறைகள் எதுவாக இருந்தாலும்
உடனடியாக களைவதற்கு இது ஒரு சிறப்பான வழியாக இருக்கும் என்று இந்த குழுவை
தொடங்க சொல்லியிருக்கிறோம் என கூறினார்,