குழந்தைகளை ஏன் கொலை செய்தேன்; ஈழத்தமிழரின் வாக்குமூலம்

குழந்தைகளை கொன்ற காரணம்... லண்டனின் கடந்த ஏப்ரல் மாதம் தனது இரு பிள்ளைகளையும் படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற ஈழத்தமிழர் அதற்கான காரணத்தினை வெளியிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது தற்கொலைக்கு முயன்ற அவரை, அவசர சிகிச்சைப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நடராஜா நித்தியகுமாருக்கு எதிராக தற்போது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு எதிரான விசாரணையின் போதே மேற்கண்டவாறு கொலைக்கான தனது காரணத்தை கூறியுள்ளார். தானில்லாத காலத்தில் தனது பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டதாக லண்டனில் தனது இரண்டு பிள்ளைகளினதும் கழுத்தை கத்தியால் வெட்டிக் கொன்றுவிட்டு தனது கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்துகொள்ள முயன்று உயிர்தப்பிய இலங்கையை சேர்ந்த குடும்பஸ்தர் கூறியுள்ளார்.

லண்டனின் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நடராஜா நித்தியகுமார், தனது நாலு வயது மற்றும் 19 மாதக் குழந்தைகளை கத்தியால் வெட்டி படுகொலை செய்தார்.

அப்போது குளியலறையிலிருந்த அவரது மனைவி வந்து பார்த்தபோது, பிள்ளைகளும் நித்தியகுமாரும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டிருந்தனர். தான் பணிபுரிந்த வேலையில் வாடிக்கையாளர்கள் ஏற்படுத்திய மனஅழுத்தமும் இதற்கு ஒரு காரணம் என்று கூறியுள்ளார்.

அவரது மனைவி தனது சகோதரியுடன் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியத்தை வழங்கினார். குற்றஞ்சாட்டப்பட்ட நடராஜா நித்தியகுமார் சம்பவம் இடம்பெற்ற கணத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் என்ன செய்வதென்றே தெரியாமல் நடந்துகொண்டிருக்கிறார் என்பதும் மருத்துவரின் ஊடாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நடராஜா நித்தியகுமார் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் இதனை தெரிவித்துள்ளார்.தீர்ப்பு வழங்கும் திகதியை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்துள்ளார்.