சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை

சென்னை: இன்று காலை முதல் பரவலாக மழை .... மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இந்த நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து கொண்டு வருகிறது.

மேலும் எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, குரோம்பேட்டை, தாம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது.

இதனால், காலை அலுவலகம் செல்வோரும், வாகன ஓட்டிகளும் சற்று சிரமமடைந்துள்ளனர். அதேவேளை வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.