சென்னையின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை

சென்னை: தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதை அடுத்து கிண்டி, எழும்பூர், புரசைவாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால், காலை அலுவலகம் செல்வோரும், வாகன ஓட்டிகளும் சற்று சிரமமடைந்துள்ளனர். அதேவேளை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை னஒன்று காணப்படுகிறது.