அமெரிக்காவின் மௌயி தீவில் காட்டுத்தீ: வானுயர எழுந்த கரும்புகை

அமெரிக்கா: மௌயி தீவில் காட்டுத்தீ... அமெரிக்க மாகாணமான ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள மெளயி தீவில் காட்டுத் தீ பரவி வருகிறது.

டோரா என்ற சூறாவளி கடுமையாக வீசியதால் தீ வேகமாக பரவியுள்ளது. சுமார் 12,000 பேர் வசிக்கும் லஹைனா பகுதியில், வணிகக் கட்டிடங்களுக்கும் தீ பரவியது. இதனால் வானுயர கரும்புகை எழுந்தது.

லஹைனாவில் வசிக்கும் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன.

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.