எட்மண்டன் நெடுஞ்சாலையில் ஒன்றுக்கும் அதிகமான வாகனங்கள் மோதி பெண் பலி

விபத்தில் பெண் பரிதாப பலி... கனடாவின் எட்மண்டன் நகரில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எட்மண்டன் நகரின் நெடுஞ்சாலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

மருத்துவ உதவி குழுவினர் அவருக்கு சிகிச்சையளித்து காப்பாற்ற முயன்றும் அது முடியாத நிலையில் சம்பவ இடத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அப்பெண் மீது மோதிய வாகனங்களில் இருந்த நபர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் குறித்த எந்தவொரு தகவலும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் விசாரணைக்கு பின்னரே மேலதிக தகவல்கள் வெளியாகும் என தெரியவந்துள்ளது.