உலகளவில் கொரோனாவினால் 9.27 லட்சம் பேர் உயிரிழப்பு

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.91 கோடியைத் தாண்டியுள்ளது. இருப்பினும், மருத்துவ துறையினரின் தன்னலமற்ற சேவையால் பலர் குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியைக் கடந்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.27 லட்சத்தை தாண்டி உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 9,27,984 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 29,175,454 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21,018,175 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்களில் 60,913 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம். உலகளவில் கொரோனாவினால் அதிகம் உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.