கட்டட இடிபாடுகளில் இருந்து 261 மணிநேரத்திற்கு பின்பு இளைஞர் மீட்பு

துருக்கி: 261 மணிநேரத்திற்கு பின் மீட்பு... துருக்கியில் நிலநடுக்கத்தால் சரிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து 261 மணி நேரத்திற்கு பின் முஸ்தபா அவ்சி என்ற இளைஞர், உயிருடன் மீட்கப்பட்டார்.

இந்நிலையில் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த நிலையிலும், தனது பெற்றோர் உயிருடன் இருக்கின்றார்களா என்று தெரிந்து கொள்ள, உறவினர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்ததும், தனக்கு பேசுவதற்கு செல்போன் கொடுத்து உதவிய மருத்துவ பணியாளரின் கையில் முஸ்தபா அவ்சி , முத்தமிட்டு மகிழ்ந்தார்.