தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னையில் 45 ஆயிரத்து 814 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 668 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
ராயபுரம் - 6,837 கோடம்பாக்கம் - 4,908 திரு.வி.க.நகர் - 3,896 அண்ணாநகர் - 4,922 தண்டையார்பேட்டை - 5,531 தேனாம்பேட்டை - 5,316 திருவொற்றியூர் - 1,755 வளசரவாக்கம் - 1,957 பெருங்குடி - 916 அடையார் - 2,777 அம்பத்தூர் - 1,741 ஆலந்தூர் - 1,124 மாதவரம் - 1,383 சோழிங்கநல்லூர் - 894 மணலி - 718