Advertisement

பிசிசிஐதான் முடிவு செய்யுமாம்: எதற்கு என்று தெரியுங்களா?

By: Nagaraj Fri, 24 Nov 2023 7:23:10 PM

பிசிசிஐதான் முடிவு செய்யுமாம்: எதற்கு என்று தெரியுங்களா?

மும்பை: பிசிசிஐதான் முடிவு செய்யுமாம்... சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடர்ந்து விளையாடுவது குறித்த முடிவை அவர்களிடமே பிசிசிஐ விட்டுவிட்டதாக தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்தது. அதன்பின் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதற்கு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரில் கவனத்தை திருப்பியதே காரணமாக பார்க்கப்பட்டது.

இதனால் இந்திய டி20 அணி நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையில் கட்டமைக்கப்பட்டது. தற்போது உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில், பிசிசிஐ தரப்பில் அடுத்த டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

rohit sharma,virat kohli,bcci,result revealed ,ரோகித் சர்மா, விராட்கோலி, பிசிசிஐ, முடிவு, தெரிய வந்துள்ளது

இதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்திய டி20 அணியை முழுக்க முழுக்க இளைஞர்களை கொண்டு கட்டமைக்க ஆலோசித்து வருகிறது.

எப்படி 2007ஆம் ஆண்டு சீனியர் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், கும்ப்ளே உள்ளிட்ட சீனியர்கள் தானாகவே முன்வந்து டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகினார்களோ, அதேபோல் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விலகும் முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஆனால் பிசிசிஐ தரப்பில் சர்வதேச டி20 கிரிக்கெட்டை தொடர்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்த முடிவு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Tags :
|