Advertisement

முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு!

By: Monisha Mon, 06 July 2020 4:29:30 PM

முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு!

சருமத்தின் பொலிவை தக்க வைக்க உருளைக்கிழங்கு உதவுகிறது. உருளைக் கிழங்கை பயன்படுத்தி தயாரிக்கும் பேஸ் பேக் பருக்களால் உண்டான தழும்புகள், புள்ளிகள் ஆகியவற்றை மறைக்க உதவுகிறது. உருளைக்கிழங்கில் உள்ள அன்டி ஆக்சிடென்ட், சருமத்தில் தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்து போராட உதவுகிறது. இதனால் கிருமிகளும், பக்டீரியாக்களும் அழிக்கப்படுகின்றன. உருளைக்கிழங்கில் உள்ள அமிலத்தன்மை, சருமத்தில் அடைக்கப்பட்ட துளைகளை திறக்க வைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்: ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு விழுது அல்லது சாறு, ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் தக்காளி விழுது அல்லது சாறு.

செய்முறை:
உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி விழுது அல்லது சாற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த கலவையுடன் தேன் சேர்த்து ஒரு பேஸ்ட் தயாரித்துக் கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் சமமாக எல்லா இடங்களிலும் தடவவும். பிறகு 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். பருக்கள் மறையும்வரை ஒரு நாளுக்கு ஒரு முறை இந்த பேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.

potato,skin,problem,beauty,multani mitti ,உருளைக்கிழங்கு,சருமம்,பிரச்சனை,அழகு,முல்தானி மிட்டி

முல்தானி மிட்டியுடன் இணைந்து உருளைக்கிழங்கு தழும்பு, சரும நிறமாற்றம் போன்றவற்றைப் போக்க உதவுகிறது. முல்தானி மிட்டி மற்றும் உருளைக்கிழங்கு கலவை, படிப்படியாக பருக்களால் உண்டான புள்ளிகள், தழும்புகள், மற்றும் கட்டிகளைப் போக்க உதவுகின்றன. இருப்பினும், இவற்றை அதிக அளவில் பயன்படுத்துவது தவிர்க்கப் பட வேண்டும். இல்லையேல் சருமம் வறண்டு போக நேரலாம்.

தேவையான பொருட்கள்: ஒரு உருளைக்கிழங்கு, ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி

செய்முறை: பச்சை உருளைக்கிழங்கை எடுத்து துருவி சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றில், ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி சேர்க்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். ஒரு வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் இதனை பயன்படுத்த வேண்டாம்.

Tags :
|
|
|