- வீடு›
- அழகு குறிப்புகள்›
- அழகை விரும்பும் பெண்களுக்காக சில இயற்கை டிப்ஸ்!
அழகை விரும்பும் பெண்களுக்காக சில இயற்கை டிப்ஸ்!
By: Monisha Mon, 30 Nov 2020 1:29:52 PM
முகம், கண், கன்னம், புருவம், நகம் என அனைத்து பகுதிகளையும் அழகுப்படுத்துவதில் பெண்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்காக சில இயற்கை டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழ தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைதால் கண்களில் உள்ள கருவளையம் மறையும்.
எலுமிச்சம் பழச்சாற்றை முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கங்கள் குறையும்.
முளைக்கட்டிய கருப்பு கொண்டைக் கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலை முடி நன்கு வளரும். தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.
நகங்களில் சிதைவு ஏற்படாலும், வெண்மையாகவும் இருக்க சூர்ய காந்தி எண்ணெய்யை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.
முட்டையின் வெள்ளைகரு, மாதுளை ஜூஸ், தேன் ஆகிய மூன்றையும் கலந்து அரைமணி நேரம் முகத்தில் பூசி விட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.
கொத்தமல்லி மற்றும் மஞ்சள் ஆகியவற்றை அரைத்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வர சருமம் மென்மையாகும்.