Advertisement

சிவந்த சருமம் வேண்டுமா? குங்குமப்பூ எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்கள்!

By: Monisha Mon, 28 Dec 2020 10:14:51 AM

சிவந்த சருமம் வேண்டுமா? குங்குமப்பூ எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்கள்!

உங்களுக்கு அழகிய சிவந்த நிற மேனி வேண்டுமா? குங்குமப்பூ எண்ணெய் உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க பெரிதும் பயன்படுகிறது. குங்குமப்பூ எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் முகத்தில் உள்ள பிரீ ரேடிக்கல்ஸை தாக்கி அழிக்கிறது. இதனால் சருமம் சேதம் அடையாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் ப்ளாக் ஹெட்ஸ்களை நீக்கி சருமத்துளைகளை நீக்குகிறது. இந்த பதிவில் குங்குமப்பூ எண்ணெய் பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த செய்வது எப்படி என்று பார்ப்போம்.

குங்குமப்பூ எண்ணெய் தயாரிக்க தேவையானவை: பாதாம் எண்ணெய் அரை கப் மற்றும் குங்குமப்பூ இதழ்கள் இரண்டு ஸ்பூன்கள். பாதாம் எண்ணெய்யில் குங்குமப்பூவை நன்றாக கலக்கவும். அதன் பின்னர் ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருங்கள். ஒரு தவாவில் நீரூற்றி கொதிக்க விடுங்கள். நன்றாக நீர் கொதிக்கும் போது எடுத்து வைத்துள்ள பாதாம் குங்குமப்பூ எண்ணையை அந்த நீரில் மேல் வையுங்கள். 30 நிமிடங்கள் மிதமான சூட்டில் நீர் கொதித்தபடியே இருக்கட்டும்.

skin,face,beauty,saffron oil,antioxidant ,சருமம்,முகம்,அழகு,குங்குமப்பூ எண்ணெய்,ஆன்டி ஆக்சிடென்ட்

பின்னர் ஆறிய உடன் எடுத்து குங்குமப்பூக்களை வடிகட்டி விட்டு நீங்கள் அதனை ஒரு பாட்டிலில் சேமியுங்கள். இதுதான் குங்குமப்பூ எண்ணெய் உங்கள் முக அழகை மேம்படுத்தும் அற்புத பொருள்.

தினமும் இரவில் நீங்கள் உறங்கும் முன் முகத்தில் தடவி கொள்ளுங்கள். காலையில் முகத்தை பாசிப்பயிறு கொண்டு கழுவி வாருங்கள். ஒரே மாதத்தில் வெட்கப்படாமலே சிவந்து போய் இருக்கும் உங்கள் முகத்தை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

Tags :
|
|
|