- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த வாரங்களில் 2 பேர் வெளியேற்றம்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த வாரங்களில் 2 பேர் வெளியேற்றம்?
By: Nagaraj Mon, 23 Nov 2020 7:25:38 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு பேர் வீதம் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி நேற்றுடன் 50வது நாளை எட்டியுள்ளது. 100 நாள் நிகழ்ச்சி என்று சொல்லப்பட்டாலும் அதற்கு மேலும் சில நாட்கள் நிகழ்ச்சி நடந்து பின் இறுதிச்சுற்று நடக்கும்.50 நாள் நிகழ்ச்சியில் இதுவரையில் ஏழு வாரங்கள் கடந்துவிட்டது.
இதற்குள் குறைந்தது 6 பேராவது நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகிய நான்கு பேர் மட்டுமே வெளியேறி இருக்கிறார்கள். கடந்த வாரம் தீபாவளி என்பதால் யாரையும் வெளியேற்றவில்லை.
இன்னும் உள்ள 50 நாட்களில் 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதாவது, ஏழு
வாரங்களில் 10 பேராவது வெளியேற வேண்டும். வாரத்திற்கு ஒருவர் என்றால் அது
முடியாது. எனவே ஏதாவது ஒரு சில வாரங்களில் இருவர் வெளியேறினால் மட்டுமே
இறுதிப் போட்டியில் 4 பேர் பங்கேற்க முடியும். இதனிடையே, வைல்டு கார்டு
மூலம் மேலும் ஒரு சிலர் நுழையலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இன்னும்
அப்படி நடக்கவில்லை.
இதற்கு முந்தைய சீசன்களில் முதல் சீசனில் 52,
53, 54வது நாட்களில் தலா ஒருவர் என மூன்று பேர் வைல்டு கார்டு மூலம்
நுழைந்துள்ளனர். இரண்டாவது சீசனில் 67வது நாளில் ஒருவர் நுழைந்துள்ளார்.
அவர்களில் ஒரு சிலர் இறுதிப் போட்டி வரையிலும் சென்றுள்ளனர்.
எனவே,
இனிவரும் நாட்களிலும் இந்த சீசனில் யாராவது நுழைந்தால்
ஆச்சரியப்படுவதற்கில்லை.நேற்று 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்று
சொல்லித்தான் கமல்ஹாசன் நிகழ்ச்சியை முடித்துவைத்தார். அது அடுத்தடுத்து
நடக்க வாய்ப்புள்ளது என்றே தெரிகிறது.