Advertisement

செம எமோஷனலாகி கத்தி, அழுத அர்ச்சனா; ஆதரவும், எதிர்ப்பும் அதிகரிப்பு

By: Nagaraj Wed, 09 Dec 2020 4:13:32 PM

செம எமோஷனலாகி கத்தி, அழுத அர்ச்சனா; ஆதரவும், எதிர்ப்பும் அதிகரிப்பு

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் அர்ச்சனா படு பயங்கரமாக எமோஷனலாகி சத்தமிட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படாத அர்ச்சனாவாக நேற்று கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி விட்டார் அர்ச்சனா. இவரது கோபம் சில ரசிகர்களுக்கு ஓவர் ஆக்ட்டிங் என்று தோன்றி விமர்சித்து வருகின்றனர்.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு மனிதன், எந்திரம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. எந்திரத்தை மனிதர்கள் போல் உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகளை எந்திரம் அணியினருக்கு ஏற்படுத்துவதுதான் மனிதர்கள் அணியின் வேலை.

அப்படிப்பட்ட டாஸ்கில் நிஷா, அர்ச்சனாவை துக்கம், கோபப்படுத்தும் நோக்கில் அவரது தந்தை மரணம் குறித்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இந்த டாஸ்க் இறுதியில் அர்ச்சனாவின் காட்டுக்கத்தல் மற்ற போட்டியாளர்களை அதிர்ச்சியடைய செய்தது. என் தந்தையின் மரணம் விளையாட்டா என்று கேட்டு கடுமையாக சத்தம் போட்டு அழுதார்.

archana,screaming,crying,netizens,nisha,question ,அர்ச்சனா, கத்தல், அழுகை, நெட்டிசன்கள், நிஷா, கேள்வி

இதைதான் தற்போது நெட்டிசன்கள் செமையாக வறுத்தெடுத்து வருகின்றனர். ஒரு நெட்டிசன், வலியும் வேதனையும் அவங்கவங்களுக்கு வந்தா தெரியும். ஆரி வளர்ப்பு விஷயத்த பேசுனப்ப இப்படி தானே இருந்திருக்கும் அவருக்கும். டாஸ்கில் நிஷா தனிப்பட்ட முறையில் காயப்படுத்தவில்லை. கோபம், சோகம் உணர்வுகளை வெளிப்படுத்ததான் கேள்விகள் கேட்டார். பின்னர் வெளியில் வந்து அதற்காக அழுது மானசீகமாக மன்னிப்பு கேட்டதும் நேற்றைய நிகழ்ச்சியில் வெளியானது. அப்படியிருக்க அர்ச்சனாவின் இந்த காட்டுக்கத்தல் ஓவர் ஆக்டிங் என்று கருத்திட்டுள்ளார்.

இதில் இன்னொரு நெட்டிசன் துக்கம்ங்கிற உணர்ச்சிய வெளிகொணர்னும்னு டாஸ்க்குல படிக்கிறாங்க! அதுக்காக நிஷா, அர்ச்சனாவோட அப்பா பத்தி பேசி அழ வைக்க செய்தாங்க. இதை அவங்களே சொல்லியும் இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார் அர்ச்சனா. ஆரிக்கு பல்வேறு வகையிலும் குடைச்சல் ஏற்பட்டப்போ அமைதியாகத்தானே இருந்தாங்க. தனக்குன்னு வந்தால் மட்டும் கத்தணுமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Tags :
|
|