Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரா நாமினேஷன் குறித்து வெளியான தகவல்!

By: Monisha Sat, 28 Nov 2020 4:01:08 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரா நாமினேஷன் குறித்து வெளியான தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா வரும் வரை எந்தவித குரூப்பும் இல்லாமல் இருந்த நிலையில், அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் தனக்கென ஒரு குரூப்பை வளர்த்து கொண்டார். அன்பு என்ற ஆயுதத்தை வைத்து தன்னுடைய குரூப்பின் உதவியால் அவர் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதே அவரது ஸ்டேட்டர்ஜியாக உள்ளது. இந்த நிலையில் அர்ச்சனாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக பாலாஜியும் ஒரு குரூப்பை சேர்த்துக் கொண்டு விளையாடி வருகிறார்

இந்த நிலையில் இந்த வாரம் அனிதா, பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம் ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். ஆனால் டாப்பிள் கார்ட் அனிதாவுக்கு கிடைத்ததை அடுத்து அந்த கார்டை பயன்படுத்தி அவர் தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்து தப்பித்துக் கொண்டார்.

bigg boss show,nomination,jithan ramesh,archana group,shock ,பிக்பாஸ் நிகழ்ச்சி,நாமினேஷன்,ஜித்தன் ரமேஷ்,அர்ச்சனா குரூப்,அதிர்ச்சி

இந்த நிலையில் நேற்றுடன் வாக்கெடுப்பு முடிந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி, குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஜித்தன் ரமேஷ் சுமாராக விளையாடினாலும் இந்த வாரம் கால் செண்டர் டாஸ்க்கில் ரம்யாவுடன் அருமையாக விளையாடினார். மக்கள் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என கூறி டாப்பிள் பாஸை முதலில் விட்டுக்கொடுத்தார்.

அர்ச்சனா குரூப்பில் உள்ள முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ஜித்தன் ரமேஷ் ஒருவேளை வெளியேறினால் அவரது குரூப்பில் ஆட்குறைப்பு ஏற்படும். இதனால் அந்த குரூப்பில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி நிச்சயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :