Advertisement

முதல் முறையாக பொங்கி எழுந்த நிஷா... சனம் இடையே வாக்குவாதம்!

By: Monisha Fri, 27 Nov 2020 4:31:18 PM

முதல் முறையாக பொங்கி எழுந்த நிஷா... சனம் இடையே வாக்குவாதம்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் சிறந்த போட்டியாளர்களும் மோசமான போட்டியாளர்களும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். சிறந்த போட்டியாளர்கள் அடுத்த வாரத்திற்கான கேப்டன்ஷிப் போட்டியில் தேர்வு பெறுவார்கள். மோசமான போட்டியாளர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

அந்த வகையில் இன்றைய மூன்றாம் புரமோவில் மோசமான போட்டியாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் நாம் எதிர்பார்த்தபடியே ரியோவை சனம் நாமினேட் செய்கிறார். கால்சென்டர் டாஸ்க்கில் சனம் மற்றும் அனிதா ஆகியோர்களின் நட்பை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் ரியோவை நாமினேட் செய்வது போல் தெரிகிறது

nisha,sanam,big boss,competitors,ari ,நிஷா,சனம்,பிக்பாஸ்,போட்டியாளர்கள்,ஆரி

சனம்ஷெட்டியை அடுத்து வந்த நிஷா, தங்கள் குரூப்பில் உள்ள ரியோவை சனம் நாமினேட் செய்ததால் அவர் சனம்ஷெட்டியை நாமினேட் செய்தார். அதேபோல் பாலாஜி ஆரியை நாமினேட் செய்தார். கடைசியில் ஆரி மற்றும் ரியோ ஆகிய இருவரும் மோசமான போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டது

இந்த அறிவிப்பின்போது குறுக்கிட்ட சனம், 'இதில் தனிப்பட்ட பகையும் கலந்திருக்கிறது என்று கூற' உடனே முதல் முறையாக நிஷா பொங்கி எழுந்தார். நிஷா-சனம் வாக்குவாதத்துடன் இன்றைய மூன்றாம் புரமோ முடிவடைகிறது.

Tags :
|
|