Advertisement

யாரும் என்னிடம் பேசவில்லை... யார் நடித்தாலும் பாராட்டுக்கள்

By: Nagaraj Fri, 22 May 2020 4:56:00 PM

யாரும் என்னிடம் பேசவில்லை... யார் நடித்தாலும் பாராட்டுக்கள்

சந்திரமுகி-2 படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. அந்த கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் எனது வாழ்த்துக்கள் என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்று பி.வாசு தெரிவித்துள்ளார். இப்படத்தில் ஜோதிகாவை இரட்டை வேடத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

ஆனால் இதுகுறித்து ஜோதிகா கூறியிருப்பதாவது:

keerthi suresh,jodhika,pictures,hit,chandramukhi-2,vasu ,கீர்த்திசுரேஷ், ஜோதிகா, படங்கள், ஹிட், சந்திரமுகி-2, வாசு

“சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க, யாரும் என்னை அணுகவில்லை. அந்த கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க நடிகை கீர்த்திசுரேசிடம் பேசுவார்கள் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் கீர்த்திசுரேஷ் நடித்த அனைத்து படங்களும் ஹிட் அடித்து அவரது கிராப்பை செமத்தியாக உயர்த்தி உள்ளன. இதனால் சந்திரமுகி-2ல் கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

Tags :
|