Advertisement

பாலாஜிக்காக பொங்கி எழுந்த அமைதிப்புறா!

By: Monisha Wed, 11 Nov 2020 5:40:42 PM

பாலாஜிக்காக பொங்கி எழுந்த அமைதிப்புறா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றுவரை அமைதிப்புறாவாக இருந்த ஷிவானி, முதல்முறையாக பொங்கி எழுந்துள்ளார். அதுவும் பாலாஜிக்காக பொங்கி, கேப்ரில்லாவிடம் அசிங்கப்பட்டுள்ளார்.

'பாட்டி சொல்லை தட்டாதே' டாஸ்க்கில் தொலைந்த பத்திரம் குறித்து பாலாஜியிடம் கேப்ரில்லா கேட்டு கொண்டிருக்க, அதற்கு பாலாஜி பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருக்கின்றார். அப்போது கேப்ரில்லா, 'ஹானஸ்ட்டா பதில் சொல்லுன்னு சொன்னேன், நீ சொல்லிட்ட, அதுக்கு அப்புறம் ஒண்ணுமே சொல்லலியே' என்று கூற. அப்போது குறுக்கிட்ட ஷிவானி, 'எதுக்கு ஹான்ஸ்ட்டா பதில் சொல்லனும் என்று கேள்வி எழுப்பினார்.

big boss show,balaji,shivani,gabriella,shock ,பிக்பாஸ் நிகழ்ச்சி,பாலாஜி,ஷிவானி,கேப்ரில்லா,அதிர்ச்சி

அதற்கு கேபிரில்லா காட்டமாக, 'நீ எதுக்கு பேசுற, நான் அவன்கிட்ட பேசுறேன்' என்று பதிலடி கொடுக்க, அதற்கு ஷிவானி, 'நீ எதுக்கு இப்ப வாய்ஸ் ரெய்ஸ் பன்ற என்று கேட்க, ஆமா அப்படித்தான் வாய்ஸ் ரெய்ஸ் பண்ணுவேன் என்ன பண்ணுவ இப்ப? என்று அதிரடியாக பதிலளிக்க என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளார் ஷிவானி.

என்னடா புதுவிதமான சண்டையா இருக்குது? என வழக்கம் போல் ரமேஷ் எரிச்சலில் காதை மூடிக்கொள்ள, ரியோவோ 'வெல்கம் டு பிக்பாஸ்' என ஜோக்கடிக்கின்றார். மொத்தத்தில் ஒரு மாதம் கழித்துதான் ஷிவானியும், கேபிரில்லாவும் தங்கள் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|