- வீடு›
- பொழுதுபோக்கு›
- எட்டு வருடத்திற்கு பின்னர் தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் சித்தார்த்
எட்டு வருடத்திற்கு பின்னர் தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் சித்தார்த்
By: Nagaraj Sun, 01 Nov 2020 4:47:23 PM
எட்டு வருடத்திற்கு பின்னர் ரீஎன்ட்ரி... நடிகர் சித்தார்த் 8 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமையான முன்னணி நடிகர். மற்ற நடிகர்களைப் போல் முன்னணி இடத்தைப் பிடிப்பதற்கு போட்டி போடாமல் சிறந்த கதை உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சமூகப் பிரச்சனை குறித்து எதிராக தைரியமாக குரல் கொடுக்கக் கூடிய நபர். ஆனால் கடந்த சில காலமாக சித்தார்த் தனது சமூக வலைத்தள கணக்குகளில் ஆக்டிவாக இருப்பதில்லை.
தற்போது சித்தார்த் தான் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்குத் திரும்புவதாக தெரிவித்துள்ளார்.
சர்வானந்த் நடிக்கும் ‘மகாசமுத்திரம்’ படத்தின் மூலம் 8 வருடங்களுக்கு
பிறகு தெலுங்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சித்தார்த் மேலும் தான் திரும்பி வருவதாகவும் மிகச்சிறந்த குழுவினருடன்
பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
“எனது குரு மணிரத்தினம்
சார் மற்றும் ஜெயேந்திரா சார் வழங்கும் நவரசா படத்தில் நடிப்பதும்,
தயாரிப்பதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை இயக்குனர்
ரதீந்திரா பிரசாத் இயக்குகிறார். பாரதி திருவொத்து என்னுடன் நடிக்கிறார்.
நமக்கு உதவ நமது துறை தானாக முன்வந்துள்ளது. அதை எதிர்நோக்கி
காத்திருக்கிறேன்.
எனது அடுத்த ஹிந்தி சீரிஸ் Escaype live
படப்பிடிப்பில் உள்ளேன். இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறேன்.
அதற்கு கொரோனாவுக்கு நன்றி. பாதுகாப்பாக இருங்கள்.
அடுத்த
வருடத்தில் தமிழில் எனது 4 படங்கள் ரிலீஸ் ஆகிறது. மொத்த உலகத்திற்கும்
இந்த வருடம் மிகவும் கடினமாக உள்ளது. வரும் நாட்களில் நாம் விரைவில் மீண்டு
வருவோம் என்று நம்புகிறேன் அதுவரைக்கும் உடம்பைப் பார்த்துக்கோங்க மக்களே.
கூடிய சீக்கிரம் சந்திப்போம் உங்கள் சித்தார்த்.” என்றும்
தெரிவித்துள்ளார்.