Advertisement

ஐபிஎல் அணியை வாங்க முயற்சித்து வரும் தென்னிந்திய நடிகர்!

By: Monisha Fri, 13 Nov 2020 2:20:48 PM

ஐபிஎல் அணியை வாங்க முயற்சித்து வரும் தென்னிந்திய நடிகர்!

சமீபத்தில் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தது. இந்த தொடரில் மும்பை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் போட்டி ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஐபிஎல் தொடரில் 8 அணிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில் 2021ஆம் ஆண்டில் கூடுதலாக ஒரு அணி இணைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளை பிசிசிஐ தலைவர் கங்குலி செய்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. அகமதாபாத் நகரை கொண்டு ஒரு புதிய அணி உருவாகலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த அணியை பிரபல தென்னிந்திய நடிகர் மோகன்லால் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

south indian actor,mohanlal,ipl,ahmedabad,cricket ,தென்னிந்திய நடிகர்,மோகன்லால்,ஐபிஎல்,அகமதாபாத்,கிரிக்கெட்

ஏற்கனவே சமீபத்தில் முடிந்த ஐபிஎல் இறுதிப்போட்டியை நேரில் கண்டு ரசித்த மோகன்லால் இதுகுறித்த பணிகளுக்காக தான் துபாய் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் பிரபல கல்வி செயலி நிறுவனத்துடன் இணைந்து இந்த அணியை வாங்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி ஆகிய திரையுலக பிரபலங்கள் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஆக இருக்கும் நிலையில் மேலும் ஒரு நடிகர் அதுவும் தென்னிந்திய நடிகர் ஐபிஎல் அணியை வாங்க முயற்சித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|