Advertisement

மழைக்காலத்தில் ஆடைகள் மற்றும் காலணிகளில் அதிக கவனம் தேவை!

By: Monisha Wed, 12 Aug 2020 11:20:29 AM

மழைக்காலத்தில் ஆடைகள் மற்றும் காலணிகளில் அதிக கவனம் தேவை!

கொரோனா காலத்தைத் தொடர்ந்து இப்போது மழைக்காலமும் தொடங்கிவிட்டது! இதுவரை கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நாம் இனி, மழைக்காலத்தில் வரும் நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மழைக்காலத்தில் வரும் நோய்களிலிருந்து தப்பிக்க நாம் அணியும் ஆடைகள் மற்றும் காலணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். காரணம், சரியாக உலர வைக்கப்படாத ஆடைகள் மற்றும் காலணிகளில் பூஞ்சைகள் (Fungus) வளர வாய்ப்புள்ளது. இதனால் சரும பிரச்னைகள் ஏற்படலாம். மழைக்காலமோ, வெயில் காலமோ எல்லா நேரத்திலும் ஆடைகளை அலமாரியில் மடித்து வைக்காமல், ஹேங்கரில் மாட்டி வைப்பதே சிறந்தது. ஆடைகளைத் துவைத்து நன்றாகக் காயவைத்த பிறகே ஹேங்கரில் மாட்ட வேண்டும். அரைகுறையாக உலர்ந்த ஈர ஆடைகளை அலமாரியில் அப்படியே மடித்து வைக்கக் கூடாது.

rainy season,dresses,shoes,fungi,moisture ,மழைக்காலம்,ஆடைகள்,காலணிகள்,பூஞ்சைகள்,ஈரப்பதம்

ஈரப்பதம் உள்ள ஆடைகளில் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைகள் வளரலாம். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு ஆடைகள் மக்கும் நிலைக்குச் சென்றுவிடும். பூஞ்சைகள் வளர்ந்த ஆடைகளை அணியும்போது, பூஞ்சைத் தொற்றுநோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் நமக்கு ஏற்படும் முக்கியப் பிரச்னை வீட்டில் அதிகரிக்கும் ஈரப்பதம். நீங்கள் ஆடைகள் வைக்கும் இடத்தில் அதிக ஈரப்பதம் இருப்பின், அங்கு கொஞ்சம் கற்பூரத்தை வைக்கலாம். கற்பூரம் ஈரப்பதத்தை உறிஞ்சுவது மட்டுமல்லாமல், உங்கள் அலமாரியையும் நன்றாக மணமுள்ளதாக வைத்திருக்கும்.

துணிகளுக்கு இடையில் சில நாப்தலின் உருண்டைகளைப் போட்டு வைக்கலாம். நாப்தலின் உருண்டைகள், பூச்சிகள் மற்றும் கறையான்களைத் தடுக்கும். நுண்ணுயிரிகளின் வளர்ச்சியையும் தடைசெய்கிறது. பல காலங்களாக அணியாமல் அலமாரியில் சேர்த்து வைத்திருக்கும் ஆடைகளை அப்புறப்படுத்திவிட்டு அணியக்கூடிய ஆடைகளை மட்டுமே ஹேங்கரில் மாட்டி வைத்திருக்க வேண்டும்.

மழைக்காலத்தில் எடை குறைவான, விரைவில் ஈரத்தை உறிஞ்சக் கூடிய உடையைத் தேர்வு செய்து அணிய வேண்டும். எளிதில் உலராத, கனமான ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதைத் தவிர்க்கலாம். பாதம் வரை தொடும் ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகப் பெண்கள் முழுநீள குர்தா, கவுன் அணிவதை மழைக்காலத்தில் தவிருங்கள். முட்டிக்கு மேல் வரை உள்ள குர்தா, டாப் அணியுங்கள். ஆண்கள் ஷார்ட்ஸ், லூஸாக இருக்கும் பேன்ட் அணியலாம். பெண்கள் கணுக்கால்வரை நீளமுள்ள லெகிங்ஸ் பேன்ட் அணியலாம். இதனால் சகதிகள், கழிவு நீர் ஆடையில் படாமல் தவிர்க்க முடியும். பொதுவாக மழைக்காலத்தில் பட்டு மற்றும் நெட் வகை சேலைகளை அணிவதைத் தவிர்க்கவும். லேசான காட்டன் வகை சேலைகளை அணியலாம்.

rainy season,dresses,shoes,fungi,moisture ,மழைக்காலம்,ஆடைகள்,காலணிகள்,பூஞ்சைகள்,ஈரப்பதம்

காலணிகள் மற்றும் ஹேண்ட் பேக்குகளை ஈரப்பதம் இல்லாத இடங்களில் வைக்க வேண்டும். காலணியை வெளியில் அணிந்து சென்று வந்த பிறகு, அவற்றை நீரில் நன்றாகக் கழுவி, அதிலுள்ள நீரெல்லாம் வடிந்து ஈரப்பதம் உலர்ந்த பிறகே அலமாரியில் அடுக்க வேண்டும். சிலிக்கா ஜெல் (Silica gel) பாக்கெட்டுகளை உங்கள் காலணிகள் மற்றும் ஹேண்ட் பேக்கில்போட்டு வைக்கலாம். இது ஈரப்பதம் மற்றும் துர்நாற்றத்தை உறிஞ்சி அவற்றைப் பாதுகாப்பாக வைக்கிறது. கற்பூரம், நாப்தலின் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

ஈரமாக உள்ள காலணிகள் மற்றும் ஹேண்ட் பேக்குகளை உலர வைக்க ஹேர் டிரையர் பயன்படுத்தலாம். தேவையற்ற காலணிகள், ஹேண்ட் பேக்குகளை அப்புறப்படுத்திவிடவும். நீர் புகாத பூட்ஸ் வாங்குவது மழைக்காலத்துக்கு உதவும். அல்லது செருப்பு மற்றும் ஷூவை மூடும் வகையிலான வாட்டர் ப்ரூஃப் கவர் வாங்கி அணியுங்கள். இதனால் ஷூ நனையாது. சாக்கடை நீர், சகதி காலில் படாமல் தவிர்க்கலாம். இதனால் நோய்த்தொற்று பரவுவதையும் தவிர்க்கலாம். பெண்கள் ஹீல்ஸ் போன்ற காலணிகளைத் தவிர்ப்பது நல்லது. மழை நேரத்தில் போட்டுக்கொள்வதற்கென பிளாஸ்டிக் டைப் காலணிகள் தற்போது அதிக அளவில் வந்துவிட்டன.

மழைக்காலத்தில் வாட்டர் ஃப்ரூப் வசதியுள்ள ஹேண்ட் பேக்குகளைப் பயன்படுத்துவது நல்லது. ஜீன்ஸ் துணியாலான ஹேண்ட் பேக்குகளை மழைக்காலத்தில் பயன்படுத்த வேண்டாம். தோலினால் ஆன ஹேண்ட் பேக்குகளை எடுத்துச் சென்றால் அவற்றை மழையில் நனையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Tags :
|
|