Advertisement

குழந்தையை கட்டையால் அடித்து கொன்ற பெண்

By: Nagaraj Wed, 09 Sept 2020 10:00:58 PM

குழந்தையை கட்டையால் அடித்து கொன்ற பெண்

குழந்தையை கொலை செய்த பெரியம்மா... கள்ளக்குறிச்சி அருகே இட்லி சாப்பிட மறுத்ததால் 5 வயது பெண் குழந்தையை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்ததாக அக்குழந்தையின் பெரியம்மாவை போலீசார் கைது செய்தனர்.

மேல்விழி கிராமத்தை சேர்ந்த ரொசோரியா-ஜெயராணி தம்பதியரின் 5 வயது குழந்தை ரென்சிமேரி. ஜெயராணி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், ரொசோரியா வேறு திருமணம் செய்யவே, குழந்தை பாட்டி பச்சையம்மாளிடம் வளர்ந்து வந்தது.

child,rolling,murder,grandma,arrest ,குழந்தை, உருட்டுக்கட்டை, கொலை, பெரியம்மா, கைது

அங்குள்ள ஜெயராணியின் மூத்த சகோதரி ஆரோக்கியமேரி நேற்று மாலை குழந்தையை உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை இட்லி சாப்பிட மறுத்ததால் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் ஆரோக்கியமேரியை போலீசார் கைது செய்தனர்.

Tags :
|
|