Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகனுக்கு மரத்தினால் செய்த சைக்கிளை பரிசாக அளித்த தந்தை

மகனுக்கு மரத்தினால் செய்த சைக்கிளை பரிசாக அளித்த தந்தை

By: Nagaraj Fri, 25 Sept 2020 11:59:16 AM

மகனுக்கு மரத்தினால் செய்த சைக்கிளை பரிசாக அளித்த தந்தை

மரத்தினால் செய்த சைக்கிளை பரிசாக அளித்த தந்தை... மதுரையைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தனது மகனுக்கு மரத்தினால் செய்யப்பட்ட சைக்கிளொன்றைப் பரிசளித்துள்ளார்.

தச்சுத் தொழிலை செய்துவரும் சூரியமூர்த்தியிடம் அவருடைய 7 வயது மகன் சைக்கிள் ஒன்றை வாங்கித் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளான். தன் மகனின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும். அதேநேரம் வித்தியாசமான பரிசாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பி உள்ளார்.

wooden bicycle,photos,brake,tire,rim,pedal ,மரத்தால் சைக்கிள், புகைப்படங்கள், பிரேக், டயர், ரிம், பெடல்

இதனையடுத்து 8 நாட்களில் மரத்தினால் சைக்கியொன்றை உருவாக்கி சூரியமூர்த்தி தனது மகனுக்குப் பரிசளித்துள்ளார்.

இவர் உருவாக்கியுள்ள சைக்கிளில் பிரேக், டயர், ரிம், பெடல், செயின் உள்ளிட்டவை தவிர ஏனைய பாகங்கள் அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் குறித்த சைக்கிளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|