Advertisement

தடுப்பணையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி

By: Monisha Fri, 11 Sept 2020 11:36:03 AM

தடுப்பணையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது மகன் மாயக்கண்ணன். அவருக்கு வயது 16. இவர் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது பள்ளி விடுமுறை தினம் என்பதால் அந்த பகுதியில் உள்ள விநாயகபுரம் தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீரில் நீச்சல் பழக நேற்று மதியம் மாயக்கண்ணன் தனது நண்பர்களுடன் சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து, சத்தம் போட்டனர்.

detention,swimming,killing,investigation,police ,தடுப்பணை,நீச்சல்,பலி,விசாரணை,போலீசார்

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று அவரை மீட்டனர். உடனடியாக சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாயக்கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாயக்கண்ணனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags :