Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை விமான நிலையத்தில் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்; 16 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்; 16 பேர் கைது

By: Monisha Tue, 15 Dec 2020 10:18:30 AM

சென்னை விமான நிலையத்தில் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்; 16 பேர் கைது

துபாயிலிருந்து சிறப்பு விமானம் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த அஸ்கர் அலி(வயது 44), சரீம் பவுலத்(20), ஷேக் அப்துல்லா(43), முகமது இப்ரகீம்(44), மணிகண்டன் சுப்பிரமணி(26), நதீம் கான்(30), காதர் உசேன்(47), சமீருல் கான்(29), அஸ்ரத் பர்வேஸ்(21), திருச்சியை சேர்ந்த யாகூப்(67), அலி(28), இளையான்குடியை சேர்ந்த முகமது அனிபா(27), தமீம் அன்சாரி(23), புதுக்கோட்டையை சேர்ந்த உசேன்(26), ஆம்பூரை சேர்ந்த முகமது பாரூக்(22) ஆகிய 15 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அட்டை பெட்டி, செல்போன் மற்றும் கைப்பைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 15 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

flight,passengers,smuggling,interrogation,arrest ,விமானம்,பயணிகள்,கடத்தல்,விசாரணை,கைது

அதேபோல் சென்னையிலிருந்து துபாய்க்கு சிறப்பு விமானத்தில் செல்ல வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சவுகத் அலி(28) என்பவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவரது கைப்பையில் ரகசிய அறைகள் வைத்து அதில் சவுதி ரியால்கள், அமெரிக்க டாலர்களை மறைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் 16 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 16 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
|