Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரானில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் 217 பேர் படுகாயம்

ஈரானில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் 217 பேர் படுகாயம்

By: Karunakaran Sun, 06 Sept 2020 3:43:27 PM

ஈரானில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் 217 பேர் படுகாயம்

ஈரானின் மேற்கு பகுதியில் இலம் மாகாணம் உள்ளது. இங்கிருந்து, குளோரின் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று ஈராக் நோக்கி புறப்பட்டது. நேற்று முன்தினம் இரவு இலம் மாகாணத்தில் உள்ள சஞ்ஜிரா என்ற கிராமத்துக்கு அருகே லாரி சென்று கொண்டிருந்த போது கன்டெய்னரில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் திடீரென வெடித்தது.

பின்னர் அடுத்தடுத்து கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால் கன்டெய்னர் லாரியில் தீ ஏற்பட்டு கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் கரும் புகை மண்டலம் உருவானது. கன்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்த சாலையில் சென்று கொண்டிருந்த பலர் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

iran,gas cylinder explosion,217 injured,lorry ,ஈரான், எரிவாயு சிலிண்டர் வெடிப்பு, 217 பேர் காயம், லாரி

சிலிண்டர்களில் இருந்து குளோரின் வாயு கசிந்து காற்றில் கலந்தது. இதன் காரணமாக, அங்குள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. தீ விபத்தில் படுகாயம் அடைந்த மற்றும் கியாஸ் கசிவால் சுவாச பிரச்சினைக்கு ஆளான 217 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி டிரைவரின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் லாரி டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.


Tags :
|