Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த 3 நாட்கள் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை

கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த 3 நாட்கள் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை

By: Monisha Sat, 13 June 2020 6:38:59 PM

கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த 3 நாட்கள் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,752 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,832 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஒரே நாளில் ஆவடியில் 15 பேருக்கும், வில்லிவாக்கத்தில் 11 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 830 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தாசில்தார் குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் முன்னிலையில் பேரூராட்சி அதிகாரிகள், வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

tiruvallur district,corona virus,3 days,shops,holidays ,திருவள்ளூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,3 நாட்கள்,கடைகள்,விடுமுறை

கூட்டத்தில், கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கடைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதன்படி, வார நாட்களில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிப்பது எனவும், மீதமுள்ள 4 நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகளை திறப்பது எனவும் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

Tags :
|
|