30 லட்சம் கேபிள் டிவி இணைப்பு; அமைச்சர் ராதாகிருஷ்ணன் பெருமிதம்
By: Nagaraj Thu, 23 July 2020 8:14:30 PM
இந்தியாவிலேயே 30 லட்சம் கேபிள் டிவி இணைப்பு கொண்ட ஒரு பெரிய நிறுவனமாக அரசு கேபிள் டிவி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விரைவில் இன்னும் பத்து லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பெதப்பம்பட்டி கொங்கல்நகரம் புதுப்பாளையம் ஆமந்தகடவு உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊராட்சி மன்றக் கட்டிடம் பள்ளி கட்டிடம் தார் சாலை அமைத்தல் குடிநீர் இணைப்புகள் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ 17.5 கோடி செலவில் அடிப்படை திட்ட பணிகள் துவக்க விழா இன்று நடந்தது.
கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று பணிகளை துவக்கி
வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய கார்த்திகேயன் உடுமலை
கோட்டாட்சியர் ரவிக்குமார் உடுமலை தாசில்தார் ஜெயக்குமார் உள்ளிட்ட
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் ராதாகிருஷ்ணன்
பேசும்போது என்று 14.5 கோடி செலவில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை
போடப்பட்டு உள்ளது. குறிப்பாக 2.5 கோடி செலவில் குடிநீர் பணிகளுக்கு
தேவையான அனைத்து பணிகளும் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றக் கட்டிடம்,
பள்ளி கட்டிடம், தார் சாலை அமைத்தல் போன்ற பணிகள் தேர்வு
செய்யப்பட்டுள்ளது.
சோமவரப்பட்டி சந்தை மேம்பாட்டுக்கு ரூ 40 லட்சம்
ஒதுக்கப்பட்டுள்ளது புக்குலம் பகுதியிலும் ஆமந்தகடவு பகுதியிலும் கூடுதல்
பள்ளிக் கட்டணங்கள் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
அரசு கேபிள் டிவியை அதிகப்படுத்தி அனைத்து மக்களுக்கும் செட்டாப் பாக்ஸ் கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே
30 லட்சம் கேபிள் டிவி இணைப்பு கொண்ட ஒரு பெரிய நிறுவனமாக அரசு கேபிள்
டிவி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விரைவில் இன்னும் பத்து லட்சம்
செட்டாப் பாக்ஸ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.