Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு 4,822 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

சென்னையில் கொரோனாவுக்கு 4,822 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

By: Monisha Wed, 18 Nov 2020 1:19:35 PM

சென்னையில் கொரோனாவுக்கு 4,822 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னைதான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 09 ஆயிரத்து 646 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 4,822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,01,041 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,783 பேர் பலியாகியுள்ளனர்.

chennai,corona virus,infection,treatment,kills ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 262
அண்ணா நகர் - 359
தேனாம்பேட்டை - 141
தண்டையார்பேட்டை - 108
ராயபுரம் - 229
அடையாறு - 118
திரு.வி.க. நகர் - 197
வளசரவாக்கம் - 140
அம்பத்தூர் - 250
திருவொற்றியூர் - 108
மாதவரம் - 156
ஆலந்தூர் - 151
பெருங்குடி - 101
சோழிங்கநல்லூர் - 57
மணலி - 43

Tags :