Advertisement

தேனியில் புதிதாக 69 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Thu, 24 Sept 2020 10:15:18 AM

தேனியில் புதிதாக 69 பேருக்கு கொரோனா பாதிப்பு

தேனியில் ஏற்கனவே 14,408 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் புதிதாக 69 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கல் அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 10 ஆக உயர்ந்துள்ளது.

theni district,corona virus,infection,treatment,kills ,தேனி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தேனியில் ஒரே நாளில் கொரோனாவால் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் ஏற்கனவே 14,408 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,477 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 13,723 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 172 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :