Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Sat, 19 Sept 2020 10:17:45 AM

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 10,203-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,30,908 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,685 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,525 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,75,717 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளில் 46,506 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

villupuram district,corona virus,infection,death,treatment ,விழுப்புரம் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,121-ஆக இருந்தது. 9,103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 82 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,203-ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|