Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து

விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து

By: Karunakaran Sun, 09 Aug 2020 3:47:51 PM

விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்று கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 மாடி கொண்ட அந்த சொகுசு ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஓட்டலில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொகுசு ஓட்டலில் 3வது மாடியில் கொரோனா வைரஸ் சிகிச்சையிலிருந்த 10 நோயாளிகள் மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பினர். இந்த தீ விபத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதால், மீட்கும் பணியில் காவல்துறை, மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

fire broke,hotel,corona patients,vijayawada ,தீ விபத்து, ஹோட்டல், கொரோனா நோயாளிகள், விஜயவாடா

சொகுசு ஓட்டலில் ஒரு பகுதியில் பற்றிய தீ, மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியதால் பல பகுதியில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் சூழ்ந்தது.

பின்னர் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பின் அங்கு 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
|